Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை

தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை

By: vaithegi Sat, 07 Jan 2023 4:34:26 PM

தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை

திருவனந்தபுரம்: சபரிமலையில் வரும் ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் உயர்ந்துள்ளது. தற்போது தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்து அய்யப்பனை தரிசனம் செய்கின்றனர்.

இதற்கு இடையே சபரிமலைக்கு வருபவர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு ஸ்பாட் புக்கிங் மூலம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

sabarimala,devotees , சபரிமலை,பக்தர்கள்

இதையடுத்து இவர்கள் அங்கு சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து வரும் 11-ந்தேதி இரவு எருமேலியில் பேட்டைத்துள்ளல் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும்.

ஜனவரி 19-ந்தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் சபரிமலைக்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் அஉயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :