Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வருகிற 29-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடல் .. தேவஸ்தானம் அறிவிப்பு

வருகிற 29-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடல் .. தேவஸ்தானம் அறிவிப்பு

By: vaithegi Mon, 02 Oct 2023 1:36:15 PM

வருகிற 29-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடல் .. தேவஸ்தானம் அறிவிப்பு


திருப்பதி : சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல் ...திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தையொட்டி சுமார் 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. இந்த மாதம் வரும் 29-ம்தேதி சந்திர கிரகணம் என்பதால், முந்தைய நாளான 28-ம் தேதி இரவு 7.05 மணி முதல் 29-ம் தேதிஅதிகாலை 3.15 மணி வரை கோயில்நடை அடைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, 5.15 மணிக்கு பிறகு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதனால் ஏழுமலையான் கோயில் நடை சுமார் 8 மணி நேரம் வரை சாத்தப்படுகிறது.

devasthanam,tirupati ,தேவஸ்தானம் ,திருப்பதி

இதனால் வருகிற 28-ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமகன்களுக்கான சிறப்பு தரிசனம் போன்றவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

எனவே இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது திருமலை யாத்திரையை திட்டமிட வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

Tags :