Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சபரிமலை .. பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

சபரிமலை .. பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

By: vaithegi Wed, 31 Aug 2022 4:34:08 PM

சபரிமலை  ..  பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

கேரளா: கேரளாவில் கொண்டாடப்பட உள்ள ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை வருகிற 6ம் தேதி மாலை முதல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதை தொடர்ந்து 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை கோவிலின் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி நெய்யபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அத்துடன் 8ம் தேதி அன்று திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

sabarimala,kerala ,சபரிமலை  ,கேரளா

இந்த பூஜைகளுக்கு பின் கோவிலின் நடை செப்டம்பர் 10ம் தேதி அன்று இரவு 10 மணிக்கு அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் செப்டம்பர் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை திறக்கப்படும்.

மேலும் இதில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் எயாரும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags :