Advertisement

ஆனி மாத பூஜைக்காக சபரி மலை கோயில் நடை திறப்பு

By: Nagaraj Thu, 22 June 2023 8:45:09 PM

ஆனி மாத பூஜைக்காக சபரி மலை கோயில் நடை திறப்பு

கேரளா: ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து பூஜைகளுக்கு பின்னர் ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது.

கடந்த 20-ம் தேதி ஆனி மாத பூஜை முடிந்து சஹஸ்ரகலச பூஜையும், வழக்கமான பூஜைகளுக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (ஜூலை) 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

ayyappa devotees,opening of,sabarimala ayyappan, ,ஆடி மாத பூஜை, சபரிமலை ஐயப்பன் கோயில், பக்தர்கள், சாமி தரிசனம்

17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் பூஜை, ஆராதனை நடக்கிறது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவும் மேற்கொள்ளப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tags :