திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலில் உழவாரப்பணி
By: Nagaraj Tue, 30 May 2023 11:05:38 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவன நாதர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது.
கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி தலைமை வசித்து உழவாரப்பணியை தொடங்கி வைத்தார். இப்பணியினை புதுச்சேரி நிமிலீஸ்வரர் உழவாரப்பணி திருக்கூட்ட தலைவர் காளி ஐயப்பன் மற்றும் 80 சிவனடியார்கள் காலையிலிருந்து மாலை வரை செய்தனர்.
இதில் திருக்கோவில் பிரகாரங்கள், சுற்றுச்சுவர்கள், நந்தவனப் பகுதி ஆகிய பகுதிகளில் உள்ள செடி கொடிகளையும் முள் புதர்களையும் அகற்றி உழவாரப்பணி மேற்கொண்டனர்
இப்பணியில் கோயில் தக்கார் லட்சுமி கோயில் எழுத்தர் சங்கரமூர்த்தி மற்றும் சிவப்பேரவை அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
Tags :
temple |
plant |