Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருகிற 4-ம் தேதி தொடக்கம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருகிற 4-ம் தேதி தொடக்கம்

By: vaithegi Tue, 02 May 2023 10:35:54 AM

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருகிற 4-ம் தேதி தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்கின்றனர்.
மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இந்த கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

pournami krivalam,thiruvannamalai ,பவுர்ணமி கிரிவலம் ,திருவண்ணாமலை

```இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதனை அடுத்து இந்தாண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து சித்ரா பவுர்ணமி வருகிற 4-ந் தேதி இரவு 11.59 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந் தேதி இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் வருகிற 5-ந் தேதி பவுர்ணமி கிரிவல செல்ல உகந்த நாள் என்றும், அன்றைய நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துவுள்ளனர். பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

Tags :