தீர்க்க சுமங்கலி வரம் கிட்ட சாவித்ரியால் அருளப்பட்ட துதியை பாராயணம் செய்யுங்கள்
By: Nagaraj Wed, 13 May 2020 11:22:40 PM
தீர்க்க சுமங்கலி வரம் கிட்ட சத்யவானின் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்யுங்கள்.
தீர்க்க சுமங்கலி வரமருளும் ஸ்லோகம்
ஓம்கார பூர்விகே தேவி வீணாபுஸ்தக தாரிணி
வேதமாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே.
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி
அவைதவ்யம் ஸௌபாக்யம்
தேஹித்வம் மம ஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம்
ஸௌமங்கல்யம் ச தேஹிமே
பொதுப்பொருள்
தனது பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புத்தகம் இவைகளை தரித்துக்கொண்டு இருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான காயத்ரி எனும் சாவித்ரி தேவியே உனக்கு நமஸ்காரம். கணவன் என்னிடத்தில் அன்பு குறையாது இருத்தல் வேண்டும். தீர்க்க சுமங்கலி வரத்தை தாயே எனக்கு அருள வேண்டும். பக்தர்களை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவளும் ஆன தேவியே! நான் சௌபாக்யத்துடன் வாழ தாங்கள் அருள வேண்டும்.