Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • மாடவீதிகளில் திருப்பதி திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் பணியை மீண்டும் தொடக்கம்

மாடவீதிகளில் திருப்பதி திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் பணியை மீண்டும் தொடக்கம்

By: Nagaraj Sun, 02 Apr 2023 10:03:22 PM

மாடவீதிகளில் திருப்பதி திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் பணியை மீண்டும் தொடக்கம்

திருப்பதி:அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மாடவீதிகளில் திருப்பதி திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் பணியை மீண்டும் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அரசு பேருந்துகள், தனியார் வாகனங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். இதுதவிர அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையிலும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது 3 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருப்பதி தேவஸ்தானம் நேற்று காலை முதல் சோதனை அடிப்படையில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மாடவீதிகளில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் பணியை மீண்டும் தொடங்கியது.

lakshmi narasimha swamy temple,swamy,tirupathi,venkatachalapathi, ,அலிபிரி, டோக்கன்கள், விநியோகம், ஸ்ரீவாரிமெட்டு

அலிபிரி நடைபாதையில் திவ்ய தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு காளிகோபுரத்தில் 10,000 டோக்கன்களும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் திவ்ய தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 1,250வது படியில் 5,000 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.
ஆதார் அட்டையுடன் நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படும். திவ்ய தர்ஷன் டோக்கன்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
இதனை பக்தர்கள் கண்காணித்து திவ்ய தரிசன டோக்கன் பெற்று சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|