சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
By: vaithegi Wed, 15 Mar 2023 09:55:49 AM
திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைக்காக நடை திறப்பு ... மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த பிப்ரவரி 12-ம் தேதி திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து 5 நாட்கள் பல பூஜைகள் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார்.
அதன் பிறகு தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வரும் 19-ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது.