சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு
By: vaithegi Wed, 16 Aug 2023 11:10:58 AM
சபரிமலை : ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு ... கேரளாவில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நிறை பூத்தறி பூஜைக்காக திறக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 10ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்ட நிலையில், ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்ட் 17- ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில், இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21ம் தேதி இரவு நடை சாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து இன்று சபரிமலை ஐயப்பனுக்கு இலட்ச அரச்சனை நடைபெற உள்ளது. மேலும் கேரளாவில் ஓணம் பண்டிகை வருவதையொட்டி வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 1ம் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.