சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
By: vaithegi Wed, 09 Aug 2023 09:43:46 AM
சபரிமலை : நாளை ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை நடைபெற உள்ள நிலையில் சபரிமலையில் இன்று நடை திறக்கப்படுகிறது.3 ஆண்டுகளுக்குப் பிறகு சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை நாளை நடைபெறுகிறது.
எனவே இதன் காரணமாக இன்று அச்சன்கோவிலிருந்து நிறைப்புத்தரி ஊர்வலம் நடைபெறுகிறது. மலையாள புத்தாண்டான சிங்கம் மாதம் ஆவணி பிறப்பை முன்னிட்டு கேரளாவில் உள்ள கோயில்களில் சுவாமிக்கு நிறைபுத்தரி பூஜை நடத்தப்படுவது வழக்கமான ஒன்று.
எனவே இதையொட்டி சபரிமலையில் இன்று மாலை நிறைபுத்தரி பூஜையொட்டி நடை திறக்கப்படுகிறது.
இதனை அடுத்து நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மல்யம் முடிந்தவுடன் நிறைபுத்தரி நெற்கதிர்களை கருவறையில் சுவாமிக்கு முன்பாக படைத்து பூஜைகள் நடத்தப்படவுள்ளது.
பூஜைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதமாக பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள் வழங்கப்படும். இதை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் ஐஸ்வரியம் நிலைக்கும் என்பது ஐதீகம்.