Advertisement

கோவை மருதமலையில் தைப்பூச தேரோட்ட திருவிழா

By: Nagaraj Sun, 05 Feb 2023 10:25:56 PM

கோவை மருதமலையில் தைப்பூச தேரோட்ட திருவிழா

கோவை: கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

தைப்பூசத்தையொட்டி நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்து. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதுதவிர காவடி ஆட்டம், பால்குட ஊர்வலமும் நடந்தது.

நேற்றே மருதலையில் தைப்பூச தேரோட்ட திருவிழா முடிந்தாலும், இன்று தைப்பூச தினம் என்பதால், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக மருதமலை முருகன் கோவிலுக்கு வந்தனர். மருதமலை செல்லும் சாலையில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரை யாக நடந்து சென்றனர்.

shops,business,marudamalai,arokhara kosha,devotees ,கடைகள், வியாபாரம், மருதமலை, அரோகரா கோஷம், பக்தர்கள்

அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் கூட்டம்அதிகரித்தது. பாத யாத்தி ரையாக வந்த முருக பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் மலைப்படிக்கட்டுகள் வழியாக, மலைகோவிலுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதுதவிர பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குட ஊர்வலமாகவும் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணதிரச் செய்தது.

நேற்றை விட இன்று அதிகமான கூட்டம் காணப்பட்டது. மலைப்ப டிக்கட்டுகளிலும், மலைப்பாதையிலும் பக்தர்களாகவே காணப்பட்டனர். மலையடி வாரப்பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டி உள்ளது

Tags :
|