Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ஏழுமலையானின் பிரம்மிக்க வைக்கும் அற்புதங்கள்

திருப்பதி ஏழுமலையானின் பிரம்மிக்க வைக்கும் அற்புதங்கள்

By: Nagaraj Thu, 29 Dec 2022 10:30:10 PM

திருப்பதி ஏழுமலையானின் பிரம்மிக்க வைக்கும் அற்புதங்கள்

சென்னை: திருப்பதி ஏழுமலையானின் பிரம்மிக்க வைக்கும் அற்புதங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

திருப்பதி ஏழுமலையான் பார்வை நம் மீது படாதா என ஏங்காதவர்கள் இல்லை. அப்படிப்பட்ட திருப்பதி ஏழுமலையான் திருஉருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் எண்ணிலடங்க ரகசியங்கள் பல உள்ளன, அவற்றில் சிலவற்றை பார்ப்போம்,

திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்னும் பெயர் கொண்ட அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

tirupati,swami idol,ornaments,miracles,abhishekam ,
திருப்பதி, சுவாமி சிலை, ஆபரணங்கள், அதிசயங்கள், அபிஷேகம்

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம் மற்றும் அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலமாகும். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எந்த அடையாளம் தெரிவதில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக் கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கும். ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் இருக்குமாம்.

Tags :