Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருச்செந்தூரில் இந்த தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது

திருச்செந்தூரில் இந்த தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது

By: vaithegi Sat, 11 Nov 2023 10:49:54 AM

திருச்செந்தூரில் இந்த தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது

திருச்செந்தூர் : கந்த சஷ்டி திருவிழா வரும் 13-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது ...திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் தமிழகம் மட்டும் இன்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இதையடுத்து நடப்பாண்டு கந்த சஷ்டி விழா அறுக்கிற 13-ம் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்குஉதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது.

ganda shashti festival,tiruchendur , கந்த சஷ்டி திருவிழா ,திருச்செந்தூர்

அதன் பின்னர் 5-ம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து தினமும் பகல் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலியபாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தீபாராதனையும் நடைபெறும்.மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.

Tags :