Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மேலும் உயர்ந்தது

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மேலும் உயர்ந்தது

By: vaithegi Sat, 20 Aug 2022 3:33:42 PM

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மேலும் உயர்ந்தது

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதை அடுத்து நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திருமலையில் குவிந்தனர்.

பக்தர்கள் கூட்டம் உயர்ந்து காணப்படுவதால் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ஏற்கனவே ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் தேவஸ்தான அறிவிப்பை அலட்சியப்படுத்திவிட்டு தரிசனத்திற்கு வருகின்றனர். வி.ஐ.பி. தரிசனத்தின் போது சாதாரண பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

devotees,tirupati ,பக்தர்கள் ,திருப்பதி

இதனால் சாதாரண பக்தர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 30 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இலவச தரிசன வரிசையில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து கொண்டு வருகின்றனர்.

மேலும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். இதையடுத்து திருப்பதியில் நேற்று மட்டும் ரூ.4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது,

Tags :