Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் புனித மாதமான புரட்டாசியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு

திருப்பதியில் புனித மாதமான புரட்டாசியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு

By: vaithegi Wed, 10 Aug 2022 12:30:58 PM

திருப்பதியில்   புனித மாதமான புரட்டாசியில்  பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க  வாய்ப்பு

திருப்பதி: நாளை (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வார இறுதி நாட்கள் கூட்டமும், திருவிழாவும் வருகிற 19-ந்தேதி வரை நீடிக்கும். இதையடுத்து புனித மாதமான புரட்டாசி மாதம் செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 17-ந் தேதி முடிவடைகிறது. இந்த நேரத்தில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

tirupati,devotees ,திருப்பதி,பக்தர்கள்

எனவே இதனால் முதியோர்கள், மாற்றுத்திறனா்ளிகள், சிறுகுழந்தைகளின் பெற்றோர் அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். முக்கிய நாட்களில் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதையடுத்து பக்தர்கள் தயாராக வந்து தரிசனத்திற்கான முறை வரும் வரை கம்பார்ட்மெண்ட்களிலும், வரிசைகளிலும் சற்று பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags :