Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி இந்த தேதி சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி இந்த தேதி சொர்க்க வாசல் திறப்பு

By: vaithegi Fri, 03 Nov 2023 1:23:18 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி இந்த தேதி சொர்க்க வாசல் திறப்பு


திருப்பதி : வருகிற 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு ... மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. இது மார்கழி மாதத்தில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர்.

இதையடுத்து இந்த நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் எனவும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.

gate of heaven,tirupati seven malayan temple,vaikunda ekadesi ,சொர்க்க வாசல் ,திருப்பதி ஏழுமலையான் கோயில்,வைகுண்ட ஏகாதேசி

திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய 10 நாட்களில் "பகல்பத்து" என்றும் பிந்தைய 10 நாட்களில் "இராப்பத்து" எனவும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி வருகிற 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.வருகிற ஜனவரி 1ம் தேதி வரை இது திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது; இதற்காக ₹300 விலையிலான தரிசன டிக்கெட் வருகிற 10ம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது.

Tags :