- வீடு›
- ஆன்மீகம்›
- திருப்பதி .. இனி வர இருக்கும் சூரிய மற்றும் சந்திர கிரகண நாட்களில் கோயிலின் நடை அடைக்கப்படும்
திருப்பதி .. இனி வர இருக்கும் சூரிய மற்றும் சந்திர கிரகண நாட்களில் கோயிலின் நடை அடைக்கப்படும்
By: vaithegi Thu, 08 Sept 2022 7:21:30 PM
திருப்பதி: திருப்பதியில் கடந்த மாதத்தில் தொடர் விடுமுறைகள் அடிக்கடி வந்ததாலும் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது. எனவே இதனால் பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க கோயில் நிர்வாகம் குறிப்பிட்ட நாட்களுக்கு முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்தியது.
மேலும், பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போது தேவஸ்தானம் பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனவே அதன்படி, அக்டோபர் மாதம் 25ம் தேதி அன்று மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதனால், அக்டோபர் 25-ந்தேதி காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணியளவில் 11¼ மணிநேரம் கோயில் கதவுகள் மூடப்படும் எனவும்,
மேலும் இதேபோன்று , நவம்பர் மாதம் 8ம் தேதி மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் உள்ளது. இதனால், அன்று காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 10 மணிநேரம் மூடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.