நல்லூர் கோயிலில் திருக்கார்த்திகை உற்சவம்... பக்தி பூர்வமாக பங்கேற்ற பக்தர்கள்
By: Nagaraj Wed, 07 Dec 2022 12:03:01 PM
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.
இதன்போது வள்ளி, தேவசேனா சமேதரராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி,ஆலய முன்றலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நல்லூர் முருக பெருமான் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்திருந்தார்.
Tags :
nallur |
devotees |