Advertisement

திருவண்ணாமலை கிரிவலம் வருகிற 1-ந் தேதி தொடக்கம்

By: vaithegi Sun, 30 July 2023 10:41:41 AM

திருவண்ணாமலை கிரிவலம் வருகிற 1-ந் தேதி தொடக்கம்

திருவண்ணாமலை : பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலையில் அமைந்து உள்ளது. உலக பிரசித்திபெற்ற இக்கோயிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வர்.

இதையடுத்து இங்கு அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் அமைந்து உள்ள மலையை சிவபெருமானாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கி.மீ தொலைவு கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதம் பௌர்ணமி நாளன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.

thiruvannamalai,devotees,krivalam ,திருவண்ணாமலை ,பக்தர்கள் ,கிரிவலம்

அதிலும், சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படும் மகாதீபம் ஏற்றப்படும் நாளும் மிகவும் பிரசித்திபெற்றவை. இந்நிலையில் இம்மாதம் ( ஆடி மாதம்) பௌர்ணமியை ஒட்டி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

அந்தவகையில் ஆடி மாத பௌர்ணமி வருகிற 1-ம் தேதி அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி, மறுநாள் 2-ம் தேதி அதிகாலை 1.05 மணி வரை உள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்த காலம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags :