Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் இந்த முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது

திருப்பதியில் இந்த முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது

By: vaithegi Thu, 05 Oct 2023 10:27:57 AM

திருப்பதியில் இந்த முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்  நடைபெறவுள்ளது

திருமலை: வரும் 15 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா ... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தாண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த செப்டம்பர் 18-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதையடுத்து தற்போது வருகிற 15-ம் தேதிமுதல் 23-ம் தேதி வரை 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றமும், கொடி இறக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த் திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும்.

brahmotsavam,tirupati ,பிரம்மோற்சவம்  , திருப்பதி


இந்த நிலையில், புரட்டாசி மாதத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்திருமலையில் குவிந்து, சுவாமி தரிசனம் செய்ய சுமார் 48 மணி நேரம் ஆகிறது. கடந்த 2 புரட்டாசி சனிக்கிழமைகளிலும் இதே நிலை நீடித்ததால்,

வருகிற 3 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் கூட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த வருகிற 6, 7, 8, 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருப்பதியில் விநியோகம் செய்யப்படும் சர்வ தரிசன டோக்கன்களை நிறுத்தி வைப்பது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்து உள்ளது.

Tags :