நாளை முதல் டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும்... திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
By: Nagaraj Sun, 31 July 2022 8:39:16 PM
திருப்பதி: நாளை முதல் ஆன்லைனில் வெளியிடப்படும்... திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பவித்ரோற்சவத்திற்கான டிக்கெட் நாளை முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி துவங்கி பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. கோயிலில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களை களைய வருடாந்திர பவித்ரோற்சவத்தின்போது யாகம் நடத்தப்படும். இதையொட்டி, நடைபெறும் உற்சவருக்கான திருமஞ்சன சேவையிலும், நிறைவு நாளன்று நடைபெறும் பூர்னாஹுதியிலும் பக்தர்கள் கலந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம் வருகிற ஆகஸ்ட் 8-ந்தேதி முதல்
10-ந்தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இதற்கான டிக்கெட்டை தேவஸ்தான
இணையதளத்தில் 2,500 ரூபாய் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்துக்
கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 நாட்களுக்கான 300
ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களை நாளை மறுநாள் முதல் ஆன்லைனில்
முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.