Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

By: vaithegi Fri, 16 June 2023 11:00:21 AM

செப்டம்பர் மாத தரிசன  டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை : திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட கட்டண சேவைகளைக் காண குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பதிவுக்கு, இம்மாதம் 19 -ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் தங்கள் ஆதார் எண் போன்ற விவரங்களை உள்ளிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகிய 21-ம் தேதி காலை 12 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் அல்லது இமெயிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அந்த குறுஞ்செய்தி ( மெசேஜ்) வைத்துக்கொண்டு பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதே போன்று வருகிற ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் ஏழுமலையான் கோவிலில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இதேபோல் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22 -ம் தேதி காலை 10 மணி முதல் தங்களுக்கு வேண்டிய சேவைகளை பக்தர்கள் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இதேபோன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற சேவைகளுக்கான விர்சூவல் முறையில் நேரடியாக பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும் டிக்கெட்டுகள் இந்த மாதம் 22 -ம் தேதி மதியம் 3 மணிக்கு பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் இதேபோல் செப்டம்பர் மாதம் ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 23-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :