திருப்பதி ... இலவச தரிசன கவுண்ட்டர்கள் குறைக்கப்பட்டுள்ளது
By: vaithegi Thu, 05 Jan 2023 10:38:14 AM
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் திருப்பதியில் 9 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
கோவிலில் வைகுண்ட துவாரத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு திருப்பதியில் 9 மையங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனம் முடிந்து, பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்கள் தரிசனம் (துவார தரிசனம்) செய்வது மட்டும் நடந்து கொண்டு வருகிறது.
இதையடுத்து துவார தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வஸ்தான அறிவிப்பின்படி, அலிபிரி பூதேவி வளாகம், சீனிவாசம் விடுதி வளாகம், விஷ்ணு நிவாசம் விடுதி வளாகம், கோவிந்தராஜசாமி 2வது சத்திரம் ஆகிய 4 இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.