Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி பிரமோற்சவ விழா .. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேலும் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு

திருப்பதி பிரமோற்சவ விழா .. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேலும் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு

By: vaithegi Sat, 27 Aug 2022 11:17:30 AM

திருப்பதி பிரமோற்சவ விழா ..   ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேலும் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

எனவே இதனால் நாடு முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருட சேவை அன்று ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வருவதால் கூடுதலாக பக்தர்கள் வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

bus,tirupati pramotsava festival,transport , பஸ்,திருப்பதி பிரமோற்சவ விழா,போக்குவரத்து

ஏற்கனவே திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 300 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு கொண்டு வருகிறது. பக்தர்கள் பிரமோற்சவ விழாவில் சிரமம் இன்றி கலந்து கொள்வதற்காக இதனையடுத்து ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேலும் கூடுதலாக 40 பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

அந்தவகையில் திருப்பதி, திருமலை, சித்தூர், காளஹஸ்தி, புத்தூர், கூடூர், வெங்கடகிரி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும்

Tags :
|