Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலை மலை மேல் ஏற்றப்படும் தீபத்திற்க்கான சிறப்பு

திருவண்ணாமலை மலை மேல் ஏற்றப்படும் தீபத்திற்க்கான சிறப்பு

By: vaithegi Wed, 22 Nov 2023 4:15:38 PM

திருவண்ணாமலை மலை மேல் ஏற்றப்படும் தீபத்திற்க்கான சிறப்பு

கார்த்திகை தீபம் என்றாலே நம் நினைவில் வருவது திருவண்ணாமலை தீபம் தான் . எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பெற்றது இந்த திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இது அக்னி ஸ்தலம் ஆக விளங்குகிறது. இங்கு சிவன் மலையாகவே இருப்பதாக நம்பப்படுகிறது. முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்த ஸ்தலமாகவும் கூறப்படுகிறது திருவண்ணாமலையில் 10 நாள் முன்பாகவே கொடியேற்றம் செய்யப்படும்.

கொடியேற்றத்தில் சிறப்பு

இந்த 10 நாட்களும் பல்வேறு பூஜைகளும், வாகனப் புறப்பாடும் நடைபெறும். நவம்பர் 23ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். அதை எடுத்து 10-வது நாள் திருக்கார்த்திகை தீபத்தன்று காலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறைக்கு எதிரே பரணி தீபம் ஏற்றப்படும்.

thiruvannamalai,special,deepam ,திருவண்ணாமலை ,சிறப்பு,தீபம்


மாலை நேரம் , சிவன் அர்த்தநாதீஸ்வரர் ரூபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடி வருவதை வருடத்தின் ஒருமுறை மட்டுமே தரிசிக்க முடியும். மாலை 6:00 மணிக்கு மலை மேல் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

மலை மேல் ஏற்றப்படும் தீபத்தின் சிறப்பு

மலை மேல் சுமார் 6 அடி உயரமும் 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் சுமார் 3500 கிலோ விற்கும் மேல் நெய்யை ஊற்றி, ஆயிரம் மீட்டருக்கு மேல் காடா துணியை திரியாக்கி கற்பூரத்துடன் சேர்த்து தீபம் ஏற்றப்படும். மலையின் மேல் ஏற்றப்படும் தீபம் 10 நாட்களுக்கு மேல் எரிந்து கொண்டே இருக்கும் .மலையைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை தீபத்தை தரிசிக்கலாம்.பிறகு பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள் ,மலையை சுற்றிலும் சிவனடியார்களால் அன்னதானம் வழங்கப்படும் .இங்கு விளக்கேற்றிய பிறகே அனைவரது இல்லங்ககளிலும் விளக்கேற்ற படுகிறது .

Tags :