Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • இன்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

இன்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

By: vaithegi Sun, 23 July 2023 3:46:59 PM

இன்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

பழனி: அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.இதையடுத்து இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தி மயில்காவடி, தீர்த்தகாவடி எடுத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

மேலும் திருவிழா காலங்கள், பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக காணப்படும்.அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

devotees,palani ,பக்தர்கள் ,பழனி

மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இதனை அடுத்து இந்த கூட்டம் காரணமாக பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அடிவாரத்திலிருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அடிவாரம் ரோடு, கிரிவீதி, பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு ஆகிய பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags :