Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் திருப்பதிக்கு செல்லும் ரயில் சேவை

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் திருப்பதிக்கு செல்லும் ரயில் சேவை

By: vaithegi Thu, 28 July 2022 9:03:51 PM

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் திருப்பதிக்கு செல்லும் ரயில் சேவை

திருப்பதி: ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் விரைவு ரயில் சேவை கடந்த மூன்று நாட்களாக இயங்கி கொண்டிருக்கிறது. இதே போல காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் மின்சார யூனிட் விரைவு ரயிலும் நேற்றில் இருந்து இயங்கி வருகிறது. இதனிடையே, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் சேவைகளையும் துவங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை அடுத்து பொதுமக்களின் இந்த கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்று ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதி வரை செல்லும் ரயில்கள் மீண்டும் இயங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

tirupati,train service ,திருப்பதி,ரயில் சேவை

அதே மாதிரி நேற்றில் இருந்து ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதி வரை செல்லும் ரயில்கள் இயங்கி கொண்டு வருகின்றன. மேலும், 2 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்கள் இயங்கியுள்ளதால் ரயிலில் வாழை மரங்கள், மலர் மாலை கட்டி அலங்கரித்தனர்.

மேலும், இந்த ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டதை அடுத்து பயணிகள் இதனை வரவேற்றனர்.

Tags :