Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • இந்த தேதி அன்று திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

இந்த தேதி அன்று திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

By: vaithegi Thu, 15 Sept 2022 2:09:49 PM

இந்த  தேதி அன்று திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் செப்டம்பர் 17ம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது.திருப்பதி திருக்கோயிலில் 17ம் தேதி நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இதனையடுத்து செப்டம்பர் 20ம் தேதி அன்று திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

darshanam,tirupati ,தரிசனம் , திருப்பதி

மேலும் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் குறைவான தங்கும் அறைகள் உள்ளதால் அவைகளில் 50% ஆன்லைன் மூலமாகவும் மீதி உள்ளவர்கள் நேரடியாக கவுண்டர்கள் மூலமாகவும் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பிரம்மோற்சவ விழாவானது செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளதால் பக்தர்கள் சென்று வர ஏதுவாக சுமார் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து திருப்பதி – திருமலை இடையே மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளது.

Tags :