Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வரும் 21ஆம் தேதி வரை விஐபி தரிசனங்கள் ரத்து

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வரும் 21ஆம் தேதி வரை விஐபி தரிசனங்கள் ரத்து

By: vaithegi Sun, 14 Aug 2022 11:18:01 AM

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வரும்  21ஆம் தேதி வரை  விஐபி தரிசனங்கள் ரத்து

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் தங்கள் குறைகளை நீங்க வணங்குவதோடு அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது மட்டுமல்லாமல் பக்கதர்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.


மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறையிலும் நிரம்பி இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

tirupati,rathu ,திருப்பதி,ரத்து

இந்நிலையில் ஏழுமலையான் கோவிலுக்கு இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.இச்சூழ் நிலையில் பக்தர்கள் கூட்டத்தை
கட்டுப்படுத்துவதற்க்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதன் மூலமாக திருப்பதியில் கூட்டம் பக்தர்கள் அதிகரிப்பதால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது .இவை வரும் 21ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து ஆக இருக்கும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :