Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருமணம் ஆகவில்லை என்று கவலையா... எளிய தீர்வு இருக்கு!!!

திருமணம் ஆகவில்லை என்று கவலையா... எளிய தீர்வு இருக்கு!!!

By: Nagaraj Mon, 20 June 2022 7:53:29 PM

திருமணம் ஆகவில்லை என்று கவலையா... எளிய தீர்வு இருக்கு!!!

சென்னை: வீட்டில் இருக்கும் யாருக்காவது திருமணம் ஆகவில்லை என்றால் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் மகிழ்ச்சியும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக அப்பிள்ளையை பெற்றவர்களுக்கு நிம்மதி என்பதே இருப்பதில்லை. இந்த எளிய பரிகாரத்தை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

முகம் பார்க்கும் கண்ணாடி என்பது சாதாரண ஒரு பொருளாக கருதப்படுவது கிடையாது. நம் முகத்தை பிரதிபலிக்கும் ஒரு பொருளாக மட்டுமல்லாமல் அது நல்ல சக்திகளை ஈர்த்து வெளியிடக் கூடிய அற்புதமான ஆற்றலையும் தன்னுள்ளே ஒளித்து வைத்துக் கொண்டுள்ளது. பித்ருக்கள் மற்றும் குலதெய்வத்தின் உடைய ஆசீர்வாதம் பெறுவதற்கு வீட்டில் பூஜை அறையில் கண்டிப்பாக ஒரு சிறிய அளவிலான முகம் பார்க்கும் கண்ணாடியை வாங்கி வைக்க வேண்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் மற்றும் பித்ரு தோஷம் உள்ளவர்கள் இது போல கண்ணாடி வாங்கி வைத்தால் அந்த கண்ணாடியின் மூலம் அவர்களுடைய ஆசிர்வாதம் நமக்கு பிரதிபலித்து கிடைக்கப் பெறும் என்கிற ஐதீகம் உண்டு.

கண்ணாடியை வீட்டின் வாசலில் மாட்டி வைத்தால் கண் திருஷ்டிகள் அண்டாது என்று கூறப்படுவதும் உண்டு. இப்படி கண்ணாடி குறித்த அற்புதமான விஷயங்களில் ஒன்றாக இருக்கக் கூடியது இந்த திருமண தடையை நீக்கக் கூடிய பரிகாரமாகும். திருமணம் ஆகாமல் நீண்ட நாட்கள் தடைபட்டுக் கொண்டிருக்கும் மணமகன் அல்லது மணமகள் வீட்டில் இருந்தால் அவர்களுடைய கைகளால் புதிய கண்ணாடி ஒன்றை வாங்கி வந்து வீட்டில் மாட்டுங்கள்.

wedding ban,glass,sixsome,movie,everyday,morning ,திருமணத்தடை, கண்ணாடி, ஆறுமுகன், படம், தினமும், காலை

அதில் முருக வடிவங்களில் ஒன்றான ‘ஆறுமுகன்’ படத்தை ஒட்டி வையுங்கள். ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளும் இருக்கக்கூடிய சண்முகமாக அப்படம் இருப்பது அவசியமாகும். கண்ணாடியில் படத்தை ஒட்டி வைத்து பின்பு அன்றைய நாள் முதல் 90 நாட்களுக்கு நீங்கள் தூங்க செல்லும் முன்பு கண்ணாடியில் இருக்கும் ஆறுமுகனை வணங்க வேண்டும். சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள்.

அதே போல காலையில் எழுந்தவுடன் முதலில் கண்ணாடியில் இருக்கும் சண்முகரின் படத்தை தரிசிக்க வேண்டும். உங்களுடைய மனக்குறைகளை அவரிடம் எடுத்து வைத்து விட்டு பின்னர் நிம்மதியாக உங்களுடைய அன்றாட வேலைகளை துவங்கி பாருங்கள்.

இது போல 90 நாட்கள் இடைவிடாமல் நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி உங்களுடைய வீட்டில் இப்படி செய்தால் 90 நாட்கள் முடிவடைவதற்குள் உங்களுடைய துணையை தேர்ந்தெடுப்பீர்கள்.

Tags :
|
|