Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது நிலவாசல்படியை மிதிக்காதீர்கள்!!!

வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது நிலவாசல்படியை மிதிக்காதீர்கள்!!!

By: Nagaraj Tue, 27 Oct 2020 10:53:44 PM

வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது நிலவாசல்படியை மிதிக்காதீர்கள்!!!

அட இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா என்று யோசிக்க வைக்கும் ஆன்மீக ரீதியான இந்த பதிவை படித்து பாருங்கள்.

வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது, இந்த ஒரு தவற்றை மட்டும் செய்யவே கூடாது. காரியத் தடைக்கு, தொடர் தோல்விக்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். சில சமயங்களில் காலம் நேரம் நல்ல நாள் பார்த்துச் செய்யக் கூடிய நல்ல காரியங்கள், சுப காரியங்கள் கூட ஏதோ ஒரு காரணத்தினால் தடைப்பட்டு விடும். ராகுகாலம், எமகண்டம் பார்த்துச் செய்யக்கூடிய காரியங்களில் ஒன்று தடைப்படுகிறது என்றால், அது நம்முடைய தலையெழுத்து என்றும் சொல்லலாம்.

நாம் அறியாமல் செய்த ஏதோ ஒரு தவற்றின் மூலம் அந்த காரியம் தடைப்பட்டு இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தினந்தோறும் நாம் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது யதார்த்தமாக எல்லோரும் செய்யும் ஒரு தவறு என்ன? அந்த தவற்றைச் செய்யாமல் வெளியே கிளம்பும் போது எந்த மந்திரத்தைச் சொல்லிக் கிளம்பினால் நல்ல காரியங்கள் தடைப்படாமல் சுமுகமாக நடைபெறும்.

according to the moon,without stepping,krigalakshmi,victorious ,நிலவாசல்படி, மிதிக்காமல், கிரகலட்சுமி, வெற்றிகரம்

நம்முடைய வீட்டில் நல்ல தேவதைகள் வசிக்கும் இடமாகச் சொல்லப்படுவது, நம் வீட்டு நில வாசற்படி. ஒரு வீடு நன்றாக இருக்கவும், லட்சுமி கடாட்சத்துடன் இருக்கவும் நில வாசற்படியின் அம்சம் என்பது நிறைய ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்‌. இதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். முடிந்தவரைக் கோவில்களுக்குச் செல்லும்போது இறைவனின் மீது சாத்திய மாலையில் ஒன்றை வாங்கி வந்து நம் வீட்டு நிலை வாசற் படியில் மாட்டி வைத்தால் அதன் மூலம் நமக்குப் பல நன்மைகள் ஏற்படும்.

நம்மில் நிறையப் பேர் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவசரத்தில் நில வாசல் படியை மிதித்து வெளியே செல்வோம். நம்முடைய கால்கள் எக்காரணத்தைக் கொண்டும் வாசற்படியை மிதிக்கக் கூடாது. அப்படி மிதிக்கும் பட்சத்தில் நில வாசல் படியில் வசிக்கும் கிரக லட்சுமிகளும், அஷ்ட லட்சுமிகளும், குலதெய்வமும் நம்மை நிச்சயம் ஆசீர்வதிக்க மாட்டார்கள்.

முடிந்தவரை வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது இனி வாசல்படியை மிதிக்கும் அந்த தவற்றை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் செய்து விடாதீர்கள். வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது, உங்களின் குலதெய்வ பெயரைச் சொல்லிவிட்டு, ‘ஓம் கிரகலட்சுமியே நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்லி விட்டு, வாசல் படியை உங்கள் கால்கள் தாண்ட வேண்டும். நீங்கள் செல்லும் காரியம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று உங்கள் வீட்டு கிரக லட்சுமி நிச்சயம் உங்களை வாழ்த்துவாள்.

Tags :