காது, கழுத்து வலி பிரச்சனைகளை தீர்க்கும் சூன்ய முத்திரை
By: Nagaraj Tue, 07 June 2022 10:12:54 AM
சென்னை: காது வலியால் அவதிப்படுபவர்கள் சூன்ய முத்திரையை செய்து வந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும். அதன் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
காது வலி, கழுத்துவலி, தைராய்டு பிரச்சனைகளை நீக்கும் சூன்ய முத்திரை பொதுவாக நிறைய மனிதர்கள் காதுவலியினால் அவதிப்படுகின்றனர். சிலருக்கு காதில் அதிக அழுக்கு சேர்வதால் காதுவலி வரும். சிலருக்கு குளிக்கும் பொழுது காதில் நீர் சென்றுவிடும், அதனால் வலி வருகின்றது.
மேலும் உடலில் சளி அதிகமானால் காதுவலி வரும். உடல் சூடு அதிகமானால் காது வலி வரும். காதுவலி பற்றி கவலைப்பட்டவர்கள் இங்கே கொடுத்துள்ள முத்திரையை அதாவது சூன்ய முத்திரையை செய்தால் காது வலி பறந்து விடும். காதுவலி இல்லாதவர்களும் இதனைப் பயிலுங்கள். காதில் உள்ள நரம்புகள் பலப்படும்.
எவ்வளவு வயதானாலும் காதுவலி வராமல் தடுக்கப்படும்.மன அழுத்தம், டென்ஷன், படபடப்பினால் கழுத்து நரம்புகளுக்கு இரத்தம்
சரியாகச் செல்லாமல் கழுத்து வலி வரும். மூளையிலிருந்து பிரியும்
சிந்தனையைத் தூண்டும் நரம்புகள் அதிக சிந்தனையினால் இரத்த ஓட்டம் சரியாகச்
செல்லாமல் பாதிக்கப்பட்டு அதனால் கழுத்துவலி வரும். இருசக்கர வாகனம் அதிகம்
ஓட்டினால் கழுத்துவலி வரும். கம்யூட்டரில் அதிக நேரம் வேலை
செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். அதிகமான எடையை சுமந்தால் கழுத்து வலி
வரும்.
தினமும் பதினைந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று
வேளைகள் பயிற்சி செய்யுங்கள். கழுத்துப் பகுதி நரம்புகள் பலப்படும்.
கழுத்துவலி நீங்கும். கவலை வேண்டாம். இவ்வளவு அற்புத பலன்களைத் தரும் சூன்ய
முத்திரையை எப்படி செய்வது என்பதை இப்பொழுது பார்ப்போம்.
முதலில்
நல்ல சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் தரையில் ஒரு மேட் விரித்து அதில்
பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கிழக்கு அல்லது
மேற்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூன்று
முதல் ஐந்து முறை மூச்சை இரு நாசி வழியாக மிக மெதுவாக இழுத்து, மிக மெதுவாக
வெளிவிடவும். பின் நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து
கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும்.
மீதி விரல்கள் தரையை
நோக்கி இருக்க வேண்டும். இந்நிலையில் முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.
ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பத்து நிமிடங்கள் இருக்கவும். செய்து
முடித்தவுடன் கை விரல்களை சாதாரணமாக வைத்து ஓரு நிமிடம் கண்களை மூடி மூச்சை
மட்டும் கவனிக்கவும். பின் எழுந்து விடலாம். இப்படி தினமும் செய்வதால்
மேற்கண்ட பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.