Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Tue, 09 June 2020 5:35:26 PM

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 11 வயதுச் சிறுவன் உட்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.ஏற்கெனவே 52 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியாதவது:- "புதுச்சேரியில் தற்போது புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காமராஜ் நகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூயிலும், வில்லியனூரைச் சேர்ந்த 31 வயதுப் பெண் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் உடல் நலமுடன் இருக்கின்றனர்.

puducherry,coronavirus,health department,coronavirus confirmed ,புதுச்சேரி,கொரோனா வைரஸ்,சுகாதாரத்துறை,கொரோனா தொற்று உறுதி

இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 77 ஆகவும், மாநிலத்தில் மொத்த பாதிப்பு 132 ஆகவும் உள்ளது. குறிப்பாக 32 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 40 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 3 பேர் வெளி மாநிலங்களிலும் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை 8,472 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 8,292 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 40 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது. கடந்த 2 நாட்களாக தொற்று எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளது. ஆகவே தொடர்ந்து மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் பாதிப்பு எண்ணிக்கை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :