Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் ஆரோக்கியத்துக்கான பல நன்மைகளையும் அடங்கிய பெருங்காயம்

உடல் ஆரோக்கியத்துக்கான பல நன்மைகளையும் அடங்கிய பெருங்காயம்

By: Nagaraj Tue, 17 Jan 2023 10:28:39 AM

உடல் ஆரோக்கியத்துக்கான பல நன்மைகளையும் அடங்கிய பெருங்காயம்

சென்னை: இந்திய சமையலறைகளில் கண்டிப்பாக இருக்கும் ஒரு மசாலா பொருள்தான் பெருங்காயம். இதனை உணவில் சேர்ப்பதால், உணவின் சுவை அதிகரிப்பது மட்டுமின்றி, இதில் உடல் ஆரோக்கியத்துக்கான பல நன்மைகளும் உள்ளன.

இது பல உணவு வகைகளின் சுவையை கூட்ட பயன்படுகிறது. பெருங்காயம் சேர்த்தால் சுவை கூடும் என்பது பலருக்கு தெரியும். ஆனால், இதனால், உடல் ஆரோக்கியமும் கூடும் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருகக் வாய்ப்பில்லை. நம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளிலிருந்து விடுபட பெருங்காயம் பெரிய சகாயமாக இருக்கிறது. பெருங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பெருங்காயம் சாப்பிடுவது இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. பெருங்காயம் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் பல கூறுகள் இதில் உள்ளன. இதை ஒரு சிறப்பு வழியில் பயன்படுத்தினால், பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.

வயிறு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் அவதியில் இருந்தால், பெருங்காயம் இதில் மிக நல்ல மருந்தாக உங்களுக்கு உதவும். அஜீரணம் ஏற்பட்டால், முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் பெருங்காயத்தை கலந்து குடிக்கவும்.

mustard oil,flatulence,relief,flatulence,upasam ,கடுகு எண்ணெய், பெருங்காயம், நிவாரணம், வாயுத் தொல்லை, உப்பசம்

இது தவிர பெருங்காயத்தை அரைத்து பேஸ்ட்டை தயார் செய்து தொப்புளைச் சுற்றிலும் தேய்ப்பது இந்த பிரச்சனையிலிருந்து தீர்வு காண ஒரு சிறந்த வழியாகும். இப்படி செய்தால், செரிமானம் விரைவில் சரியாகும்.

பல நேரங்களில் நாம் பதற்றம் காரணமாக தலைவலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக நாம் வலி நிவாரணிகளை உட்கொள்கிறோம். எனினும், வலி நிவாரணிகளை உட்கொள்வது ஆபத்தாகலாம். ஏனெனில், இவற்றால் பல பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். தலைவலிக்கு இயற்கையான நிவாரணம் வேண்டுமானால் பெருங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து நெற்றியில் தடவி வந்தால் சிறிது நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.

பலர் வாயுத் தொல்லையால் அவதிப்படுகிறார்கள். இது பல பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது. இதனால் தாங்க முடியாத வலியும் ஏற்படுகின்றது. வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் ஆகியவை ஏற்பட்டால், கடுகு எண்ணெயுடன் பெருங்காயப் பொடியை சேர்த்து தொப்புளைச் சுற்றி தடவவும். இப்படி செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Tags :
|