Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அதிக நன்மைகள் தருவதாக இருந்தாலும் பப்பாளியை அளவோடு எடுப்பதே சிறந்தது

அதிக நன்மைகள் தருவதாக இருந்தாலும் பப்பாளியை அளவோடு எடுப்பதே சிறந்தது

By: Nagaraj Tue, 31 Oct 2023 2:10:36 PM

அதிக நன்மைகள் தருவதாக இருந்தாலும் பப்பாளியை அளவோடு எடுப்பதே சிறந்தது

சென்னை: பப்பாளியை அளவோடு எடுத்துக் கொண்டால் நன்மை பயக்கும். அதுவே அதிகம் சாப்பிட்டால் என்ன பிரச்னை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எலுமிச்சையும், பப்பாளியும் சேர்ந்து நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.

பப்பாளி நன்மை பயக்கும் என்றாலும் இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும். பப்பாளியில் பப்பேன் என்ற என்சைம் இருப்பதால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வீக்கம், தலைசுற்றல், தலைவலி, சொறி போன்ற அலர்ஜிகள் ஏற்படும்.

papaya,discoloration,fiber,diarrhea,excess ,பப்பாளி, நிறமாற்றம், நார்ச்சத்து, வயிற்றுப்போக்கு, அதிகளவு

பழத்தின் தோலில் லேடெக்ஸ் உள்ளது. இது வயிற்றில் எரிச்சல் மற்றும் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். புளித்த பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது.

பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தின் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். மற்ற அனைத்து நார்ச்சத்துள்ள பழங்களைப் போலவே பப்பாளியும் அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுப்போக்கை மோசமாக்கும்.

Tags :
|
|