Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆவாரம்பூ, கருப்பட்டி தேநீர்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆவாரம்பூ, கருப்பட்டி தேநீர்

By: Nagaraj Fri, 26 June 2020 1:42:06 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆவாரம்பூ, கருப்பட்டி தேநீர்

தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். இதனால் உடல் வலுவடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த வகையில் இன்று மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை பரவலாக எல்லோருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கிறது. பெண்களுக்கான உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

avocado,blackberry,cardamom,pepper,ginger ,ஆவாரம்பூ, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு, இஞ்சி

தேவையான பொருட்கள்

ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
கருப்பட்டி - சிறிய துண்டு
மிளகு அரை - டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்
ஏலக்காய் - 2

செய்முறை : ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும். நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.

Tags :
|