தேங்காய் தண்ணீரை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
By: Nagaraj Sat, 10 Sept 2022 11:39:49 PM
சென்னை: தேங்காய் தண்ணீர் தினமும் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேங்காய் என்றாலே சிலருக்கு மிகவும் பயம் ஏனென்றால் தேங்காய் என்றால் கொலஸ்டரால் என்று பயந்து அதனை சாப்பிட மறுத்துவிடுவார்கள். ஆனால் தினமும் தேங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் தேங்காய் தண்ணீர் குடித்தால் அதிலிருந்து உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
அதில் முக்கியமாக இருப்பது உடலுக்கு தேவையான நீர் சத்துக்கள் கிடைக்கும். ஆதலால் தினமும் ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீர் குடிக்கலாம். சிலருக்கு அதிகமாக பசி எடுக்கும் ஆதலால் அவர்கள் அதிகம் உணவை எடுத்துக் கொள்வார்கள். ஆகையால் உடல் எடை அதிகரிக்கலாம், கொழுப்புகள் அதிகரிக்கும்.
அதனை தடுக்க தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் பசியை
கட்டுப்படுத்தும் உடலையும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
கொழுப்புகளையும் அதிகரிக்காமல் தடுக்க முடிகிறது.
எந்த
உணவு பொருட்களை உட்கொண்டாலும் உடலில் எதுக்களிப்பு, நெஞ்சில் நிற்பது
போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் அதாவது 7 நாட்களும் தேங்காய் தண்ணீர்
குடித்து வந்தால் வாயு தொல்லை மற்றும் செரிமான கோளாறுகள் வராது.
இரத்த
அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில் தேங்காய் தண்ணீர் பருகுவதால் உடலின்
electrolytes-களை சரியாக மாற்றி சீராக இயக்க உதவுகிறது. உயர் இரத்த
அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தினமும் தேங்காய் தண்ணீர் குடிப்பதால்
உடலில் ஆற்றலையும், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகமாக்கி தைராய்டு
சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.