அதிக மருத்துவக்குணங்கள் அடங்கிய குறிஞ்சா கீரையின் நன்மைகள்
By: Nagaraj Tue, 16 June 2020 09:45:20 AM
குறிஞ்சாக் கீரை அதிக மருத்துவப் பயன்பாடு கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இது அதிகமாக பயன்படுகிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். மரங்களில் கொடியாகப் படரும். கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.
குறிஞ்சாக் கீரை இரண்டு வகைப்படும். அவை சிறுகுறிஞ்சான், பெருகுறிஞ்சான். இவை தானாகவே வளரும் இயல்புடையது. சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து.
இது வேலிகள் மற்றும் மரங்களில் கொடிபோல படரும். இது கசப்புச் சுவை உடையது.
இதன் இலை சிறிதாகவும், முனை கூர்மையாக மிளகாய் போன்று காணப்படும். மலையைச்
சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது.
இத்தகைய தாவரங்களுக்கு
சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும்
மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய உணவாக கருதப்படுவது
குறிஞ்சாக்கீரை. சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க குறிஞ்சாக்கீரை
சிறந்த மருந்தாகும்.
வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். உடல் எடை குறைய குறிஞ்சாக்கீரை உதவுகிறது.
குறிஞ்சாக்கீரை சளியினை போக்கும் தன்மை உடையது. வயிற்று வலியினை போக்கிறது.
குளுமைப்படுத்தும் திறன் கொண்டது.
குறிஞ்சாக்கீரை சிறுநீர் போக்கினை
தூண்டும் தன்மை மிகுந்தது. நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்க
உதவிகிறது. உடல் சூடு தணிய செய்யும்.