Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மார்பக புற்றுநோய் சிகிச்சை முறையும், சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பும்

மார்பக புற்றுநோய் சிகிச்சை முறையும், சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பும்

By: Karunakaran Tue, 17 Nov 2020 8:02:35 PM

மார்பக புற்றுநோய் சிகிச்சை முறையும், சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பும்

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த மாதத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், நோய் தடுப்பு கருத்தரங்குகளும் அதிகளவில் நடத்தப்படும். அப்படி இருந்தும் பெண்களிடம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளைவிட, விழிப்புணர்வு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுவதால், அந்த காலத்தில் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

கூச்ச சுபாவம், பயம் போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் பற்றி பிறரிடம் பேசுவதில்லை. மேலும் மார்பகங்களில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை குடும்ப பெண்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அதை பெற்றோரிடமும், கணவரிடமும் பகிர்ந்து கொள்வதும் இல்லை. யூ-டியூப் தளத்தில் ‘பிரஸ்ட் கேன்சர் எக்சாமினேசன் அட் ஹோம்’(Breast Cancer Examination at home) என்று தேடிப்பார்த்தால் நூற்றுக்கும் அதிகமான வீடியோக்கள் வரும். அதில் மார்பகங்களை எப்படி வீட்டிலேயே பரிசோதிப்பது என்பதை வீடியோவாக விளக்கி இருப்பார்கள். அதை பின்பற்றி மாதம் ஒரு முறை மார்பகங்களை வீட்டிலேயே பரிசோதித்து பாருங்கள்.

breast cancer,treatment,postoperative care,womens ,மார்பக புற்றுநோய், சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின் பராமரிப்பு, பெண்கள்

மார்பகம், அக்குள் போன்ற பகுதிகளில் ‘கட்டி’ இருக்கிறதா?, அவை வலியை உண்டாக்குகிறதா? என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெறுங்கள். முடிந்தவரை ஆரம்பநிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், மார்பக புற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம். கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற பல சிகிச்சைகள் மூலம் ஆரம்பநிலை நோயிலிருந்து குணம் பெறலாம். நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில்தான் பாதிக்கப்பட்ட மார்பகத்தை அகற்றவேண்டியிருக்கும். அதை நினைத்தும் வருந்த தேவையில்லை. ஏனெனில் தமிழகத்தில் மார்பக சீரமைப்பு, செயற்கை மார்பக உருவாக்கம் போன்ற சிகிச்சை முறைகள் அதிகரித்துவிட்டன.

மூன்று முறைகளில் செயற்கை மார்பகத்தை உருவாக்கலாம். ஒன்று உடலில் இருக்கும் தசைகளை கொண்டு உருவாக்குவது. மற்றொன்று, உடல் கொழுப்புகளை கொண்டு உருவாக்குவது. இறுதியாக வெளிநாடுகளில் பிரபலமான சிலிக்கான் பொருளை உட்செலுத்தியும் செயற்கை மார்பகத்தை உருவாக்கலாம். உலக அளவில் இது மிகவும் வெளிப்படையான சிகிச்சை. ஆனால் தமிழ்நாட்டில்தான் கூச்சப்படக்கூடிய, மூடிமறைக்கக்கூடிய சிகிச்சையாக இருக்கிறது. பக்க விளைவும் மிகமிக குறைவு என்பதால், பல்வேறு காரணங்களால் மார்பகத்தை இழந்தவர்களும், மார்பகத்தை சீரமைக்க விரும்புபவர்களும் முயன்று பார்க்கலாம். செலவும் ரூ.1 லட்சம் முதல் ஒன்றரை லட்சத்திற்குள் அடங்கிவிடும்.

Tags :