சர்க்கரை நோய் உள்ளவர்கள் பிஸ்தா சாப்பிடலாமா? கூடாதா?
By: Nagaraj Sat, 17 Dec 2022 11:24:13 PM
சென்னை: சர்க்கரை நோய் இன்றைய காலக்கட்டத்தில் முதியவர்களை தாண்டி இளைஞர்களும் உண்டாகிறது. இதற்கு தவறான உணவு முறைகளே முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
அதேப்போல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சாப்பிட்டால் பிரச்சினை வரும் என்று வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் உண்மை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொழுப்பு சத்து புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பாதாம், பிஸ்தாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் பசி உணர்வைக் கட்டுபடுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி, உணர வைக்கும் தன்மை அதற்கு உள்ளது. அதனால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பிஸ்தா சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.