Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தேங்காயில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளதாம்

தேங்காயில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளதாம்

By: vaithegi Sun, 19 Nov 2023 09:47:29 AM

தேங்காயில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளதாம்

அதிக அளவில் ஊட்டச்சத்து உள்ள இயற்கை உணவான தேங்காயினை தினம் தோறும் சாப்பிட்டுவந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல.தேங்காய் செரிமானத்திற்கு மிக முக்கியமானதாக கருதப்படும் என்சைம்களின் உற்பத்தியினை அதிகரிக்கின்றது.மேலும் இந்த பதிவில் தேங்காய் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி நாம் இங்கே காணலாம்.

தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும். தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது.

benefits,benefits,flatulence,stomach ulcer,stomachache ,நன்மைகள் ,பயன்கள் ,வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலி

1.பொதுவாக தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

2.தினமும் காலையில் சிறிதளவு தேங்காயை மென்று உண்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடைய செய்கிறது.

3.சிலருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு நோய் ஏற்படும் .இது ஏற்படாமல் இருப்பதற்கு தேங்காயில் உள்ள வேதிப்பொருட்கள் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது.

4.அதுமட்டுமில்லாமல் தேங்காய் பற்களுக்கு பளபளப்பு தன்மையை கொடுக்கின்றது.

5.தேங்காய் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் முகப்பரு, தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு மிக சிறந்த இயற்கை மருந்தாக உள்ளது.

6.தோல் பளபளப்பு தன்மையுடன் இருப்பதற்கு நாள்தோறும் சிறிதளவு தேங்காயினை மென்று சாப்பிட்டு வந்தால் போதும்

7.மேலும் ஆரோக்கியம் மிக்க தேங்காயில் புரதம் மற்றும் செலீனியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

8.மேலும் பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புரதம் மற்றும் செலீனியம் இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

9.மேலும் தேங்காயில் இருக்க கூடிய கொழுப்பு மற்றும் எண்ணெய் இரத்தத்தில் கலந்து பளபளப்பான தோற்றத்தினை கொடுக்கும்.சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை தருகிறது.

10.முழு ஆரோக்கியம் கிடைக்க தேங்காயினை பச்சையாக நன்றாக மென்று உண்ணலாம் .இப்படி சாப்பிடுவதன் மூலமாக நார்ச்சத்தானது முழுமையாக நமக்கு கிடைக்கின்றது.


Tags :