Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குடும்பத் தலைவிகள் மத்தியில் இருந்த மனக்குறையை தீர்த்த கொரோனா

குடும்பத் தலைவிகள் மத்தியில் இருந்த மனக்குறையை தீர்த்த கொரோனா

By: Karunakaran Thu, 17 Sept 2020 1:07:49 PM

குடும்பத் தலைவிகள் மத்தியில் இருந்த மனக்குறையை தீர்த்த கொரோனா

விடுமுறை நாட்களில் கணவர் வீட்டு வேலைகளில் உதவி செய்வதில்லை என குடும்பத் தலைவிகள் மத்தியில் மனக்குறை இருக்கிறது. தற்போது கொரோனா காரணமாக பெரும்பாலான கணவர்மார்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அதன் மூலம் பொழுதை போக்கவும் செய்கிறார்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் வேலைகளை பிரித்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்ய வைக்க வேண்டும். அப்போதுதான் சலிப்பு ஏற்படாமல் வேலைகளை மன நிறைவுடன் செய்து முடிப்பார்கள்.

கடைசியாக குளிக்கும் நபர் குளியலறையை சுத்தம் செய்வது, செல்லப்பிராணிகளை நேசிப்பவர் அதனை குளிப்பாட்டுவது, சாப்பிட்ட தட்டுகளை அவர்களே கழுவுவது போன்ற செயல்பாடுகள் மூலம் குடும்ப தலைவியின் சுமையை குறைக்கலாம். வாரந்தோறும் ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு துப்புரவு பணியை தேர்ந்தெடுக்கலாம். எல்லா பொருட்களையும் வைப்பதற்கு பிரத்யேகமாக ஒரு இடத்தை தேர்வு செய்துகொள்வது நல்லது. செய்தி தாள், வீட்டு சாவி, பீரோல் சாவி, டி.வி ரிமோட், வாகன சாவிகள் போன்றவற்றை குறிப்பிட்ட இடத்தில் வைத்தால் அநாவசியமாக தேட வேண்டி இருக்காது.

corona,grievances,family heads,kitchen ,கொரோனா, குறை, குடும்பத் தலைவர்கள், சமையலறை

ஒவ்வொரு முறையும் அறையை விட்டு வெளியேறும்போது ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தால் ஒழுங்கு படுத்திவைக்க பழகிக்கொள்ள வேண்டும். தேவையற்ற குப்பைகள் கிடந்தால் அப்புறப்படுத்திவிட வேண்டும். சுழற்சி முறையில் குடும்ப உறுப்பினர்கள் சமையல் குறிப்புகளை கொடுப்பது அவர்களை ஆர்வமுடன் சமைக்கவைக்கும். தூங்கி எழுந்ததும் அவரவர் படுக்கை விரிப்புகளை சுருட்டி அதற்குரிய இடத்தில் வைப்பதும் நல்ல பழக்கவழக்கமாகும்.

வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்தால் சமையல் பாத்திரங்கள் அதிகமாக பரிமாறப்படும். அவற்றை துலக்குவது குடும்பத்தலைவிகளுக்கு சிரமமாக இருக்கும். அப்போது உதவி செய்வது அவர்களின் வேலைப்பளுவை குறைக்கும். துணி துவைக்காவிட்டாலும் அலமாரியில் அவரவர் உடைகளை நேர்த்தியாக மடித்துவைத்து எடுக்க பழகினாலே போதும்.

Tags :
|