Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குழந்தைகளுக்கு மருந்துகளை கொடுக்கும் போது தாய்மார்களுக்கு எழும் சந்தேகங்கள்

குழந்தைகளுக்கு மருந்துகளை கொடுக்கும் போது தாய்மார்களுக்கு எழும் சந்தேகங்கள்

By: Karunakaran Tue, 20 Oct 2020 2:46:51 PM

குழந்தைகளுக்கு மருந்துகளை கொடுக்கும் போது தாய்மார்களுக்கு எழும் சந்தேகங்கள்

குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, டாக்டரிடம் ஆலோசனை பெற்று, மருந்துகளையும் வாங்கி வீடு திரும்பும் பெரும்பாலான இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு அந்த மருந்துகளை கொடுக்கும்போதுதான் நிறைய சந்தேகங்கள் ஏற்படும். நோய் பாதித்த குழந்தைகளை டாக்டரிடம் காட்டி, பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மருந்துகளை வாங்கி உடனடியாக கொடுக்க தொடங்கவேண்டும். மருந்தின் அளவு, தன்மை பற்றி கூடுதலாக ஏதாவது சந்தேகம் இருந்தால் மருந்து வாங்கும் பார்மசிஸ்டிடமும் கேட்க வேண்டும்.

டாக்டர் குறிப்பிடும் மருந்தினை, அவர் குறிப்பிடும் அளவில் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேண்டும். குறிப்பாக ஆன்டி பயாடிக் மருந்துகளை சரியாக 8 மணி நேர இடைவெளியில் வழங்குவது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் மருந்தினை கொடுக்காமல் இருந்தால் உடலில் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கும், வைரஸ்கள் ஆன்டிபயாடிக்குகளோடு எதிர்வினையாற்றுவதற்கும் காரணமாகிவிடும். அதனால் குழந்தைகளிடம் நோய்த்தன்மை அதிகரித்துவிடும். ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு அண்ணனுக்கு வாங்கிய மருந்துகளை, தம்பிக்கு அதே நோய்கள் ஏற்படும்போது கொடுத்துவிடக்கூடாது. ஒரு குழந்தைக்கு பரிந்துரைத்த மருந்தை இன்னொரு குழந்தைக்கு கொடுப்பது தவறு.

doubts,mothers,medications,children ,சந்தேகங்கள், தாய்மார்கள், மருந்துகள், குழந்தைகள்

டாக்டர் தினமும் மூன்று வேளை மருந்தினை கொடுக்க சொன்னால், தவறாமல் அதன்படி செய்யவேண்டும். மருந்து கொடுத்த சில மணி நேரத்திலே நோய் கட்டுக்குள் வந்து விடும் என்று கருதக்கூடாது. நோய்தன்மை குறைந்ததும் ஒருசில மருந்துகளை நிறுத்தவேண்டியதிருக்கும். டாக்டர் ஒரு மருந்தினை 5 மி.லி. அளவு உட்கொள்ளவேண்டும் என்று கூறினால், துல்லியமாக அதே அளவில் குழந்தைக்கு வழங்கவேண்டும். அளவு மாறினால் நோய் குணமாகாது. சில குழந்தைகள் மருந்தினை விழுங்காமல் துப்பிவிடும். அத்தகைய நெருக்கடிகள் ஏற்படாத அளவுக்கு கவனமாக குழந்தைகளுக்கு மருந்து புகட்டவேண்டும்.

சில மருந்துகள் தூள் வடிவத்தில் இருக்கும். கொதித்து ஆறிய நீரை அதில் சேர்த்து நன்றாக குலுக்கி அந்த மருந்தை தயார் செய்யவேண்டும். மருந்தில் சேர்க்கும் நீர் எந்த அணுத்தொற்றும் இல்லாததாக இருக்கவேண்டும். கடையில் டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு இன்னொரு கம்பெனி மருந்தினை வாங்குவதற்கு முன்னால், அந்த டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதே சிறந்தது. மாத்திரைகளை விழுங்க குழந்தை மறுத்தால் அதை டாக்டரிடம் கூறி திரவ மருந்துகளை பரிந்துரைக்கும்படி கூறலாம். குழந்தை மாத்திரைகளை விழுங்க மறுத்தால் அதனை சர்க்கரை கரை சலிலோ, தேன் கரைசலிலோ, பழச்சாறிலோ கலந்து வழங்கக்கூடாது.


Tags :
|