மனஉளைச்சல், படபடப்பை போக்கிட இதை சாப்பிடுங்க
By: vaithegi Thu, 19 Jan 2023 10:02:37 PM
கொத்தவரையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட்ஸ் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க வல்லவை.
கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்க்க ரத்த ஓட்டம் சீராவதுடன் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் உதவுகிறது. செரிமானத்திற்கு உதவுவதுடன் இரைப்பையில் தங்கிப் புற்றுநோய் உருவாக்கும் கிருமிகளை வெளியேற்றவும் உதவுகிறது.
மனஉளைச்சல், படபடப்பை போக்கிட உதவுகிறது. ஆசனவாய்ப் புற்றுநோயை தவிர்க்கும் வல்லமை கொத்தவரைக்கு உண்டு.கொத்தவரங்காய் போலவே அதன் இலைக்கும் மகத்துவம் உண்டு. கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயை தணிப்பவை. வலி நிவாரணியாக, கிருமி நாசினியாகவும் இதன் இலை செயல்படுகிறது.எஸ்.எஸ்.சி தேர்வை தமிழ்
எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) ஆண்டுதோறும் மத்திய
அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி
பணியமர்த்துகிறது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில்
மட்டும் நடத்தப்படுவந்தது.
இந்த நிலையில் காலியாக உள்ள 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்
உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி
அளித்துள்ளது.
அந்த வகையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட 13 மாநில மொழிகளில்
இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதி உள்ளவர்கள் பிப்.17-ம் தேதிக்குள்
https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.dailythanthi.com/News/India/permission-to-write-ssc-exam-in-tamil-881534
இதையடுத்து ஒரு கைப்பிடி அளவு இலையுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் ஆஸ்துமா எனும் மூச்சிரைப்பு குறையும். இரவு நேரப்பார்வை கோளாறை தடுக்கும்.
கொத்தவரை இலை ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். கொத்தவரை விதையை கொதிக்க வைத்துக் குடித்தால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள் குறையும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கொத்தவரங்காய் மருந்தாகிறது.