தேன்- லவங்கப் பொடியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும்
By: Nagaraj Tue, 12 July 2022 09:19:03 AM
சென்னை: ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.
சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது. உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான். தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.
அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவைக் கொடுத்து வருகிறார்கள். அதிசயக்கத்தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள். ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம். மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்து வாருங்கள். 'எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்' என்று அடித்துச் சொல்கிறார்கள் கோபன்ஹேகன் பல்கலைக் கழக ஆய்வு மையத்தினர்.
ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை
மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து
விடும். கொழுப்பு சத்து நோய் வரவே வராது. இரு தேக்கரண்டி தேன், ஒரு
தேக்கரண்டி லவங்கப்பவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர்
போன்றவை அடியோடு மறையும். தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும்
உள்ளது.
இதை நாம் தொடர்ந்து லவங்கப்
பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ
ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிரூபித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், 'வயிறு
மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்' என்று தெரிய
வந்துள்ளது.
ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி
லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில்
இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.