பெருஞ்சீரகம் - சீரகத்தில் உள்ள வித்தியாசம் மற்றும் நன்மைகள்
By: Nagaraj Wed, 14 Dec 2022 9:30:40 PM
சென்னை:பெருஞ்சீரக விதைகள் இனிமையான அதிமதுரம் சுவையை கொண்டிருக்கும். சீரக விதைகள் ஒருவித நறுமண வாசனையை கொண்டிருக்கும். பெருஞ்சீரகத்துடன் ஒப்பிடும்போது சற்று கசப்பு தன்மை கொண்டிருக்கும். மேலும் பெருஞ்சீரகம் விதைகள் பச்சை நிறத்தில் காணப்படும்.
சீரகம் பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். சிலருக்கு இரண்டும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருப்பது போல் தெரியும். சீரகத்தை விட பெருஞ்சீரகம் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அறுவடை செய்யப்படுவதால் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. சீரக விதைகள் நன்றாக உலர வைக்கப்படுவதால் பழுப்பு நிறத்தில் இருக்கும். அளவில் வேறுபாடு இரண்டின் தோற்றமும், வடிவமும் ஒரே மாதிரியாக தெரியலாம். ஆனால் அளவு அடிப்படையில் அடையாளம் காண்பது எளிதானது.
பெருஞ்சீரக விதைகளை விட சீரகம் சிறியதாகவும், மெல்லியதாகவும்
இருக்கும். இரண்டையும் ஒன்றாக வைத்து பார்த்தால் எளிதாக வேறு படுத்தி
விடலாம். பெருஞ்சீரகம் விதைகள் சீரக விதைகளை விட இனிப்பு சுவை கொண்டவை.
சீரக விதையின் மணம் காரமான குழம்பு வகைகளுக்கு மிகவும் ஏற்றது. அதேசமயம்
பெருஞ்சீரகம் விதையின் நறுமணம் புத்துணர்ச்சிக்கு ஏற்றது. இதன் இலைகள்
மற்றும் தண்டுகள் கூட இனிமையான நறுமணத்தை கொண்டவை. அவை சாலட் தயாரிப்பில்
பயன்படுத்தப்படுகின்றன.
பெருஞ்சீரகம் இயற்கையாகவே
நறுமணத்தை பரப்பு வதால் அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
சீரகம் வாசனை திரவியத்தில் சேர்க்கப்படுகிறது. பல அத்தியாவசிய எண்ணெய்களில்
இந்த மசாலாப் பொருட்கள் இரண்டுமே இடம்பெற்றுள்ளன. பெருஞ்சீரகம் இனிப்பு
உணவுகளிலும், சீரகம் காரமான குழம்புகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.