தாய்ப்பால் சுரக்க சிறந்த உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்
By: Nagaraj Thu, 22 Dec 2022 9:30:12 PM
சென்னை: சிறந்த உணவு பழக்கம் தேவை... தாய்மார்கள் தினமும் சிறந்த உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடிப்பதன் மூலமாக தாய்ப்பாலை பெருக்கிக் கொள்ளமுடியும்.
தினமும் அதிக புரதசத்துள்ள முளை கட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால்ப்பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு போன்றவற்றை அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் .
முருங்கை இலையுடன் பாசிபருப்பு சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும். பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும் .
பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள் , பிரோகஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் இருப்பதால் பால் சுரப்பது அதிகமாகும் .கல்லீரல், மண்ணீரல் , சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிட்டு வர தாய்ப்பாலை சுரக்க செய்யும் .
காலை மற்றும் இரவு சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள பச்சைக் காய்கறிகள், கேரட், கோஸ், பீட்ருட், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஓமத்தை தண்ணீரில் ஊறவைத்து குடிக்க தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும் .சோயாபீன்ஸ்,காய்ந்த சுண்டைக்காய், பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம் . ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுப்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும் . சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.