Advertisement

சர்க்கரை வியாதியை விரட்ட இவற்றை சாப்பிடுங்கள்!!

By: Monisha Wed, 08 July 2020 2:20:30 PM

சர்க்கரை வியாதியை விரட்ட இவற்றை சாப்பிடுங்கள்!!

சர்க்கரை வியாதி என்பது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். உடலில் உள்ள கணையம் என்னும் பகுதி இன்சுலினை சுரக்க வைக்கின்றது. இந்த இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டால் சர்க்கரை வியாதி ஏற்படும். பொதுவாக இந்த சர்க்கரை வியாதியில் இரண்டு வகை உண்டு. டைப் ஏ என்பது சிறுவயதில் ஏற்படுவது. டைப் பி சர்க்கரை நோய் வகையானது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவது.

நாவல் பழங்களின் கொட்டைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இந்த கொட்டைகளை நன்கு காயவைத்துப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியைத் தினமும் அரை ஸ்பூன் என்ற அளவில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்துக்கொண்டு காயவைத்துப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் என்ற அளவில் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் இந்த நீரை வடிகட்டி அருந்த வேண்டும்.தினமும் காலையில் இவ்வாறு செய்து வந்தால் நீரிழிவு நோய் குறைந்துவிடும்.

diabetes,fruit,dill,aloe,turmeric ,சர்க்கரை வியாதி,நாவல் பழம்,வெந்தயம்,கற்றாழை,மஞ்சள்

கருஞ்சீரகம் ஒரு அற்புதமான மூலிகையாகும். மரணத்தைத் தவிர மற்ற அத்தனை விதமான நோய்களுக்கும் இந்த கருஞ்சீரகம் சிறந்த மருந்து என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் கருஞ்சீரகத்தை அப்படியே அல்லது பொடியாக அரைத்து தினமும் உட்கொள்வதன் மூலம் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளலாம்.

இலவங்கப்பட்டையைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினம் அரை ஸ்பூன் என்ற அளவில் இதனை உட்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வரும் பொழுது ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது மேலும் கெட்டக் கொழுப்பைக் கரைப்பதிலும் பெயர் பெற்றது.

வெந்தயத்தைப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு ஸ்பூன் என்ற அளவில் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். வெந்தயக்கீரையைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். இரத்தத்தின் சர்க்கரை அளவு சீரான அளவில் இருக்கும். மேலும் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் கரையும்.

diabetes,fruit,dill,aloe,turmeric ,சர்க்கரை வியாதி,நாவல் பழம்,வெந்தயம்,கற்றாழை,மஞ்சள்

கற்றாழை இயற்கையின் கொடை என்றால் மிகையல்ல. கற்றாழையின் வெளிப்புறத் தோலை நீக்கி உள்ளிருக்கும் வளவளப்பான பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். இந்த சாற்றைத் தினமும் அருந்தி வர, இரண்டாம் வகை சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி ,துளசி பொடி மற்றும் நாவல் பழக் கொட்டை பொடி முதலியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை நாள் ஒன்றுக்கு அரை ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வழிமுறை சர்க்கரை நோயாளிகளுக்குப் பெரிய அளவில் கை கொடுக்கும்.

பாகற்காயில் இன்சுலின்-பாலிபெப்டுடைட் என்னும் ரசாயனம் உள்ளது.இந்த வேதிப் பொருளானது ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய் பொரியல், பாகற்காய் சூப் மற்றும் பாகற்காய் குழம்பு போன்றவற்றைத் தயாரித்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

diabetes,fruit,dill,aloe,turmeric ,சர்க்கரை வியாதி,நாவல் பழம்,வெந்தயம்,கற்றாழை,மஞ்சள்

முருங்கை இலைகளைப் பறித்துக் காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் அரை ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.

ஆளி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக உணவிற்கு பிந்தைய ரத்தத்தின் சர்க்கரை அளவு நல்ல முறையில் குறைந்து சீரான அளவிற்கு வரும்.

diabetes,fruit,dill,aloe,turmeric ,சர்க்கரை வியாதி,நாவல் பழம்,வெந்தயம்,கற்றாழை,மஞ்சள்

துளசி மகத்துவமான மூலிகை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கருந்துளசி இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கும் துணை புரியும்.இந்த இலைகளில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சிக்கல்களை வராமல் தடுக்கின்றன.

மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் காணப்படுகின்றது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒரே அளவில் வைக்க உதவுகிறது. ஆக உணவில் அடிக்கடி மஞ்சள் சேர்ப்பதன் மூலம் சர்க்கரை நோய் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

Tags :
|
|
|