பாட்டி வைத்தியம்... டாக்டரே தேவையில்லை... பாருங்க... பயன்பெறுங்கள்
By: Nagaraj Sat, 24 Sept 2022 11:25:33 AM
சென்னை: இன்று லேசாக தலையை வலித்தாலும் உடனே டாக்டரை தேடி ஓடுகிறோம். ஆனால் அன்றோ... நம்ம பாட்டி வைத்தியம்தான். எளிய, பயனுள்ள பாட்டி வைத்தியத்தில் சிலவற்றை பார்ப்போம்.
நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். வீட்டிலேயே மருந்து இருக்குங்க. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு நீங்க... சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி
ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு
குணமாகும். நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து
சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி
ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்
நாற்றம் காணாமல் போய்விடும்.
உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை
எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர
உதட்டு வெடிப்பு குணமாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி,
சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம்
சரியாகும். மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள்
கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு
தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால்
வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். வயிற்று வலிக்கு
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி
நீங்கும். இப்படி அந்த காலத்தில் நம்ம பாட்டி படிக்காமலேயே வீட்டில்
இருந்ததை வைத்தே மருத்துவம் செய்து இருக்காங்க. அதனால்தான் நம் முன்னோர்கள்
திடகாத்திரமாக இருந்தனர்.